Wednesday, October 13, 2010

எது சுகம்

தோளிலே முகம் புதைத்து விம்மும்போது
மனம் அறிந்து துயர் துடைக்க
நேசமிக்க கணவரின் தலை வருடல்
சுகமோ சுகம்

அழகான மாலைப் பொழுதில்
இணையாக ஜோடி சேர்ந்து
இயற்கையை ரசிக்கும்போது
செல்லமாக தட்டி செல்லும்
சில்லென்ற காற்று
சுகமோ சுகம்

கடற்கரையில் நிற்கையிலே
அலைப் பெண்களின் அட்டகாசம்
ரசித்துக் கொண்டிருக்கும்போதே
தஞ்சமென சரண் அடைந்தாற்போல்
பாதத்தை வருடுவதும்
சுகமோ சுகம்

காலையில் சென்று
மாலையில் திரும்ப
களைப்பே இருப்பினும்
காலைக் கட்டிக் கொண்டு
கொஞ்சிடும் மழலையின்
அணைப்பும் சுகமோ சுகம்

இத்தனை சுகம் இருந்தாலும்
அத்தனைக்கும் சிகரம்
உடல் தூய்மையோடு
உளத் தூய்மைக் கொண்டு
வாழப் பழக அவ்வாழ்க்கை
சுகமோ சுகம் சுகமோ சுகம்
என்னவென்று சொல்வேன்
இச்சுகத்தை.

Tuesday, October 12, 2010

உத்தம தர்மம் எது?

குருக்ஷேத்ரப் போர் முடிந்தது
தருமரும் அரியணை ஏறினார்
பட்டம் ஏற்றப் பின்
ராஜ சூய வேள்வியும் நடந்தது
வேள்வி முடிந்து அனைவரும்
கலைந்த பின் வேள்வியைப் பற்றி
புகழ் மாலைகள் பல வந்து
குவிந்த வண்ணம் இருந்தது
கேள்விப் பட்ட கீரி ஒன்று
வேள்வி நடந்த இடத்தில்
புரண்டு புரண்டு வந்தது
ஆனால் ஆயாசத்துடன்
உச் உச் என்றது அதைப்
பார்த்த தர்மரும் கீரியை
அழைத்து அணைத்து பரிவுடன்
என்ன வேண்டும் என்று கேட்க
ஹூம் உம்மால் முடியாது
என்றது கீரி - வியப்புடன்
தருமரும் கீரியைப் பார்க்க
கீரி சொன்னது தன கதையை
அய்யா தர்மரே என்னைப் பாரும்
என் ஒரு பக்கத் தங்க நிறத்தை
உமது அரிய பெரிய குணங்களைக்
கேட்டு ஆவலாய் வந்தேன் -
ஏமாற்றமே மிச்சம் என ஆரம்பித்த
கீரியை பார்த்தார் வியப்பு நீங்காமலே
புரியவில்லை விளக்கமாக சொல்
என கீரியை கேட்க அதுவும் சொன்னது
நான் ஒரு வயோதிக தம்பதியினரின்
வீட்டில் கண்டேன்ஒரு காட்சி
வயது முதிர்ந்த பெற்றோருடன்
இருந்தனர் இரு பிள்ளைகள்.
அன்றைய உணவு திணைமா தான்
உணவு அருந்த அமர்ந்த போது
ஒரு அந்தணர் வந்தார் அங்கே
பசி என சொல்லி இளைப்பாற
கொஞ்சம் கேட்டார்.
வயதில் மூத்த பெரியவர் மற்றவர்
கொடுக்க முன் வந்தும் தன்
பங்கினை முன்னம் ஈந்தார்
போதவில்லை என்று மீண்டும் கேட்க
அம்முதியவர் மனைவி தன் பங்கை ஈந்தார்.
மீண்டும் மீண்டும் என்று கேட்ட போது
அப்பிள்ளைகள் இருவரும் தம்
பங்கை ஈந்தனர்.
நால்வரும் தான் தான் கொடுப்பேன்
தான் தான் கொடுப்பேன் என்று
போட்டியிட்டு அனைவரும் தம் தம்
பங்கை கொடுக்க
அந்தணர் ரூபத்தில் வந்த
இறைவனும் அவர்களை
அழகான விமானத்தில் வைகுந்தம்
அழைத்துச் சென்றார்.
அங்கே சிந்திய மாவில் புரண்டதில்
ஒரு பாதி பொன்னிறம் ஆயிற்று
மறு பாதிக்கு இங்கு வந்தேன்
இப்போது சொல் அரசே
நான் கேட்டதை உன்னால்
கொடுக்க முடியுமா என்றே
கீரியும் கேட்டது தருமரை
வெட்கத்தினால் தலை குனிந்தார்
தருமருமே


நாம் என்றும் அடிமைகளே

ஞானியின் குருகுலம் மரத்தடி நிழலிலே
சீடர்கள் குழுமினர் வேத பாடம் கற்க
ஞானியும் வந்தார் பாடத்தை தொடங்கினார்
பூனை ஒன்று குறுக்கிலும் நெடுக்கிலும் ஓட
சீடர்கள் கவனம் திசை திரும்பியது
ஞானி சொன்னார் ஒரு சீடரிடம்
பூனையை பிடித்து கட்டு என்றே
தினமும் பூனை குறுக்கே வரவும்
இதுவே தினமும் வாடிக்கைஆச்சு
காலம் சென்றது ஞானியும் அடைந்தார்
இறைவனின் திருவடி - ஞானியின் பாடம்
கேட்ட பூனையும் அவர் வழி சென்றது
சீடரில் மூத்தவர் ஞானியின் பீடத்தில்
வழக்கம் போல் கூடினர் சீடர் குழாமுமே
பாடம் தொடங்கும் முன் பார்த்தால்
பூனையைக் கட்டும் கம்பம் வெறுமை
பார்த்தார் ஞானி , உடனே சீடரை அழைத்து
பூனையை சீக்கிரம் கொண்டு வந்து கட்டுங்கள்
பாடம் நடத்த நேரமாச்சு என்றார்
காரணம் அறியாது, அறியவும் முயலாது
முன்னம் நடந்ததை பழக்கம் என கருதிய
புதிய ஞானியைப் போன்றே
விளக்கம் காணாது பழக்கம் வழி நடக்கும்
அனைவரும் மூட நம்பிக்கைக்கு அடிமைகளே!

Saturday, October 9, 2010

பழமொழி 2

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்

இதற்கும் பொதுவாக நாம் கொள்ளும் அர்த்தமே வேறு

ஆனால் என் வகுப்பில் சொல்லிக் கொடுத்தது
திருமணம் ஆகி முதல் அறுபது நாட்கள் ஆசை இன்னும் முப்பது நாட்கள் மோகம் என்ற வகையில் கணவன் மனைவி திருமண பந்தத்தின் புது உறவை ரசித்து அனுபவிக்கலாம். பின்னர் கணவன் மனைவியின் கூடல் ஒரு நெறிமுறையோடு இருக்க வேண்டும். அதாவது தாம்பத்யம் என்பது மாதத்தில் இரண்டு முறை தான் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இருந்தால் உடல் நலம் வாழ்க்கை நலம் அனைத்தும் மிக சீராக இருக்கும்.

பழமொழி

ஆணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

இந்த பழமொழியை யார் எப்படி புரிந்துக் கொள்கிறார்களோ தெரியாது. நான் செல்லும் ஆன்மீக வகுப்பில் என் ஆசானால் சொல்லப்பட்ட அற்புதமான விளக்கம் இதோ
ஆணை = ஆ நெய் பசுவின் நெய் பசுவின் நெய் நாம் அதிக அளவில் சிறு வயதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
பூனை = பூ நெய் பூவிலிருந்து கிடைக்கும் நெய் அதாவது தேன் நாற்பது வயதுக்குப் பின் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது தான் மேற்சொன்ன பழமொழிக்கு அர்த்தம்.

பரம்பொருளே உனக்கோர் மடல்

கரும வினையை தீர்க்க
பிறவி பயனை அடைய
உடலைக் கொடுத்த இறைவா
மடலை வரைகிறேன் உனக்கே

உடலைக் கொடுத்தாய் ஊனம் இன்றி
பொருளைக் கொடுத்தாய் நலமாய் வாழ
வாழ்க்கையை கொடுத்தாய் வாழ்ந்து பார்க்க
அறிவைக் கொடுத்தாய் உன்னை அறிய

அழகான வீடு, அற்புதமான கணவர்
அருமையான பிள்ளைச் செல்வங்கள்
அளவோடு பொருள் வளம் பொன் வளம்
அனைத்துக்கும் மேலான போதும் என்ற நிறை மனம்

இத்தனையும் அளித்த என் இறைவா
அத்தனைக்கும் நன்றிதான் பாராட்டினேன்
என்னிடம் ஏதும் குறை கண்டாயோ
பின் ஏன் இந்த சோதனை

நீ எனக்கு வைக்கும் பரீட்சையோ
அல்லது என் உள்ளொளிப் பயணத்துக்கு தீட்சையோ
அறிகிலேன் அறிவிலி நான்
என்னை தடுத்தாட் கொள் இறைவா
பின் ஏன்

Friday, October 8, 2010

எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்


எனக்கு வகுத்த நெறிமுறைகள் - மெய்யெழுத்து வரிசையில்

ஞ்சனாய் இராதே
போல் வளைந்துக் கொடு
த்தியம் பேசு
ஞான மார்க்கம் தேடு
ம்பம் வேண்டாம்
ண்ணியம் காட்டு
ண்மையாய் வாழ்
ன்மையை செய்
வ்யமாக இரு
ந்தமாய் இராதே
யாசிக்காதே அன்பைக் கூட
ம்மியமான இயற்க்கையை நேசி
க்ஷத்தில் ஒருவனாய் இரு
ணக்கமாய் இரு
குவதில் இனிமை காட்டு
வு முறை எதிலும் கடை பிடி
க்க பழகு பிறர் செய்யும் தீமையை
தை நீ ஆள பழகு அதை ஆள விடாதே