Monday, December 6, 2010

thuriya thavam

நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். பெறற்கரிய பேறு பெற்று இருக்கிறோம். இறைநிலையே தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாக ஓரறிவு முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை வந்து ஆறறிவு கொண்ட மனிதனாக வந்து இருக்கிறோம். ஆறாவது அறிவு என்பது என்ன? பகுத்தறியும் திறன் தான். இத்திறன் கொண்டு தான் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி உள்ளது என்ன ? வாழ்வின் நோக்கம். வாழ்வின் நோக்கம் என்ன ? எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே திரும்பி போவது தான். எங்கு இருந்து வந்தோம்? இறைநிலையில் இருந்து தான். நாம் நம் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல் இறைவன் தன அழகை தானே ரசிப்பதற்காக இவ்வாறு பலவிதமாக உருவெடுத்து வந்ததாக சொல்வதுண்டு . பொருள் வாங்கி வர கடைக்கு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருவதில்லையா அது போல் தான் இந்த மனித உடலோடு பூமிக்கு வந்தது தற்காலிகமாக தான் மீண்டும் நாம் வந்த இடத்துக்கே சென்றாக வேண்டும். அனைவரும் அப்படி தான் செல்வோம். ஆனால் அதற்கான கால அவகாசம் தான் வித்தியாசப்படும். சரி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? அழகான வழிமுறைகளை நம் ஆசான் அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் அழகாக வகுத்து கொடுத்துள்ளார் அதன் வழி நடக்க வேண்டியதே.


நாம் பிறக்கும்போதே பெற்றோர்கள் வழியாக அதற்கும் முந்தைய மூதாதையர் வழியாக பதிவுகளோடு தான் பிறந்து இருக்கிறோம். போதாதற்கு நாம் பிறந்த முதற்கொண்டு இன்று வரை எத்தனையோ செயல்கள் புரிந்து அதனையும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம் இப்பதிவுகள் நல்லதோ தீயதோ அதனையும் கழித்தாக வேண்டும், தீய பதிவுகளாக நிறைய வைத்திருந்தால் கழுதை மாதிரி உதைகிறோம், குரங்கு மாதிரி நடந்து கொள்கிறோம், தேள் மாதிரி கொட்டுகிறோம் நாய் மாதிரி குரைக்கிறோம் எல்லா விலங்கின பதிவுகளும் சேர்ந்து தான் வைத்திருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் பதிவுகளும் கொண்டது தான் இந்த மனித பிறவி. இந்த பதிவுகள் அனைத்தும் சேர்ந்து தான் நாம் வந்த நோக்கத்தை மறந்தி புலன் வழி செயல்பட்டு மீண்டும் பதிவுகளை கூடிக் கொண்டே இருக்கிறோம். புலன் மயக்கத்தில் சிக்கிய மனம் கூடவே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களை வளர்த்து கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக ஐந்து பெரும் பழி செயல்களையும் அதாவது பொய் களவு, சூது, கொலை, கற்பழிப்பு முதலியவைக்கும் வழி வகுக்கிறது.

எனவே அறநெறியைப் பின்பற்றி வாழும்போது, இத்தகைய பழிசெயல்கள் நம்மை அணுகாது.


இதற்க்கு முதலில் நாம் நம் மனதை பழக்க வேண்டும் . அதற்காகவே இந்த தான முறைகள், தற்சோதனை உடல் பயிற்சி ஆகியவைகள் நமக்கு அருள் தந்தை அவர்களால் வழங்கப்பட்டுள்ளது எளிய முறை குண்டலினி யோகமாக. இதில் முதலில் உடலை சீராக வைத்துக்கோலா உடல் பயிற்சியும் உயிரை வலமாக வைத்துக் கொள்ள காய கல்ப பயிற்சியும் மனதை வளபடுத்த த்யானம் தற்சோதனையும்.

த்யானம் செய்வதற்கு தக்க ஆசானால் தீட்சை கொடுக்கபடுகிறது, இது முறையே ஸ்பரிச தீட்சை (கோழி தன முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல்)சச்சு தீட்சை அல்லது நயன தீட்சை (மீன் தன முட்டைகளை பார்வையாலேயே குஞ்சு பொரிப்பது போல்) கொடுக்க படுகிறது. ஸ்பரிச தீத்சை அகின்னை தீட்சையாகவும், நயன தீட்சை துரிய தீட்சையாகவும் கொடுக்கபடுகிறது. இதில் ஆசிரியர் தன கண்களில் ஆற்றலை வரவழைத்து தன அருட்ப பார்வையால் தீட்சை கொடுப்பார். ஐம்புலனாக விரித்தே பழகிய மனம் ஆகினை தீட்சையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது துரிய தவத்தில் அப்புலனும் மறைந்து மனம் மூல நிலையான உய்ராகவே நிற்கும். உயிர் உயிராக நின்றால் தனது அடக்கத்தில் பிரமம்மாக இரைநிலைஆக அமைதி பெறுவதற்கு துரியத்தில் தயாராகிறது . இந்த தவம் துரிய தவம் என்றும், சஹாஸ்ராதார யோகம் என்றும் அழைக்கப்படும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் அதாவது நமது மூலையிலே ஆயிரக்கணக்கான பணிச் சிற்றறை இயக்க மையங்கள் உள்ளன. ஒவொவொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல சிற்றறைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் .


மகரிஷி இது குறித்து கவி புனைந்துள்ளார்


உச்சியிலே நீ சென்றால் உடனே காணும்

ஒரு அதிசயம் வலமாம் சுற்று ஆகும்

அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு காணும்

அவ்விடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்

இச்சைஎல்லாம் பிறக்குமிடம் கண்டு கொள்வாய்.

எது வேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு

நச்சுவிளை இச்சைஎல்லாம் அழித்துவிட்டு

நலம் ஈயும் எண்ணமே மீதங் கொள்வாய்


ஆக்கினை தவம் செய்துவிட்டு துரிய நிலை தவத்திற்கு உச்சியில் நினைவை செலுத்தும்போது உயிர் சக்தி மூலையில் உள்ள சிற்றரைகளுக்கெல்லாம் ஊடுருவி போகும். அந்த ஓட்டமானது இனிமையாக இருக்கும். ஒவொருவருக்கு ஒவொரு விதமாக இருக்கும். சாதாரணமாக மூலையில் இருக்கும் சிற்றறைகளில் மிக குறைந்த பகுதியையே நாம் பயன்படுத்துகிறோம். மற்றவை பயன்பாடிற்கு வராது. துரிய தவம் இயற்ற அவை ஒவ்வொன்றாக செயலுக்கு வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது இறைநிலையோடு தொடர்பு கிடைத்து இன்டூஷன் எனும் உள்ளுணர்வு கிடைக்கும்.

துரிய தவம் புரிய புரிய

௧) ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும். நடுமனத்தை வெற்றி கொள்கிறது. நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும். மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும். தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .

Tuesday, November 30, 2010

புரிகிறதா உனக்கு

என் வீட்டில் உமி இருக்கு
உனக்கு நான் அதை தரவா
நீ என்ன தருவாய் எனக்கு
அவல் இருக்க உன் வீட்டில்
கொண்டு வாயேன் தோழி
என் வீடு வுமியையும்
உன் வீட்டு அவலையும்
ஒன்றாக சேர்த்தே
ஊதி ஊதி தின்னலாம்
என்ற காலம் தானே இப்போது
சொந்தமென்ன பந்தமென்ன
சுற்றம் என்ன நட்பு என்ன
எதுவுமே இல்லை
மண்ணிலே பிறந்து
மண்ணிலே வாழ்ந்து
மண்ணாக போவதற்கு
யாருமே தேவையில்லை
நெஞ்சமே ஆன்மாவின்
சொல் கேட்டு நீ நடந்தால்
துயரமே இல்லை எப்போதுமே
எனக்கு அந்த பலத்தை
நீ தருவாய்
துயர் வேண்டாம் என நான் நினைக்கவில்லை
துயர் கண்டு அஞ்சா நெஞ்சமும்
எதிர் கொள்ளும் துணிவும்
நீ அருள்வாய் எல்லோர்க்கும்
அதுவே நான் வேண்டுவது
எல்லாம் வல்ல இறைநிலையே
என் வேண்டல் உனக்கு புரிகிறதா?

Sunday, November 14, 2010

கவலை ஏனோ?

கவலை ஏனோ?

கவலை எனக்கு இல்லை என்று சொல்வாருண்டோ
கவலை இல்லை என்று கவலை படும் ஜன்மமும் உண்டு இங்கே
கவலை படுவதால் அது தீரும் என்பது உண்டோ
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வீணே மனதை கெடுக்கும்
கவலை வீணே உடலை கெடுக்கும்
அதுவே நம்மின் உயிர்க் குடிக்கும்
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வேண்டாம் நண்பர்களே
நடந்தது நல்லேதே
நடப்பது நல்லதே
நடக்கும் நல்லதே
என்றே இருப்போம்
இன்றோடு அதனை
வழி அனுப்புவோம்

சின்ன சின்ன அணில் குட்டி

சின்ன சின்ன அணில் குட்டி
சிங்கார அணில் குட்டி
ராமர் வைத்தக் கோடுடன்
வாலை வாலை ஆட்டியே
அழகாக மரத்தில் ஏறி
அற்புதமாய் காய்த்திருந்த
கொய்யாக் காயை
கொறித்து கொறித்துத் தின்றது
ஒயிலாக நின்று அதை
கண்ணாரக் கண்டு நான்
என்னையே மறந்தேனே
அழகான் அந்த காட்சிக் கண்டு
அதன் பட்டு மேனித் தொட்டுப் பார்க்க
அளவில்லாத ஆசையே
ஆயினும் என் செய்வேன்
அது ஓடியே விட்டது
என்னை அது கண்டதும்

Wednesday, November 10, 2010

பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட்6

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்

மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .


பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட் 5

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்


மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .














Tuesday, November 9, 2010

பீஷ்மர் Part IV

தேவ விரதன் பீஷ்மர் ஆன கதை

மலருக்கு மலர் தாவும் வண்டென மன்னன் சந்தனுவும்
பெண்ணுக்கு பெண் தாவும் குணம் கொண்டவனோ
கங்கை பிரிந்ததும் மங்கை தந்த மகன் தனை
கண்ணும் கருத்துமாய் கொண்டாடி மறந்தனன் பெண்தனை
இருந்தும் விதி செய்த மாயமோ யமுனை அவன் வந்த காரணம்
கரையினிலே அவன் கண்ட பதுமையவளிடம் கொண்ட காதல்
காதலை அவளிடம் கனிவுடன் கூறி மங்கை நல்லாளின் ஒப்புதல்
வேண்ட மீனவ பெண் அவள் செம்படவ தலைவன் தன் தகப்பனை
காணச் சொல்ல அவள் அழகிலே மயங்கிய மன்னனும் உடனே
அத்தலைவனைக் கண்டு தன் விழைவினை கூற அவனுமே ஒரு
நிபந்தனை விதித்தான் யுவராஜா பட்டம் தன் மகளின் மகனுக்கு
கிடைக்குமெனில் அவன் விருப்பம் நிறைவேற்ற தனக்கேதும்
தடை இல்லையென்று, எட்டாக் கனியென நினைத்தே வழி நடந்தான்
நடைபிணம் போல் உலா வரும் தன்னருமை தந்தையின் நிலைக்
கண்டு குலைந்த மகன் ஏன் என்று கேட்க தான் கண்ட நிலவினையும்
கொண்ட காதலையும் அது எட்டாக் கனியான கதையும் சொல்ல
தந்தைக்கு வந்த துன்பம் தனக்கென வந்தது போல் நினைத்து
செம்படவத் தலைவனைச் சந்தித்து அவர் மகள் பால் தன் தந்தை
கொண்ட மையலை விவரித்து பெண் கேட்க, தன் இச்சைதனை
வெளியிட்ட தலைவனுக்கு தான் இன்றே யுவராஜா பட்டத்தை விட்டேன்
என் சொல்லியும், பேராசைக் கொண்ட தலைவனுமே மறுத்து
உன் பேரில் உள்ள நம்பிக்கை உன் வாரிசு பேரில் எனக்கு எப்படி வரும்
என்று வினவிய தலைவனை பார்த்து போட்டானே ஒரு சபதம்
திருமணம் எனக்கு இல்லை , ஆயுள் உள்ளவரை பிரம்மச்சாரி என்று
தேவவிரதனின் இத்தகு அற்புத செயலை கண்டு களித்த
தேவர்கள் பூமாரி பொழிந்து , முனிவர்களும் ஞானிகளும்
பீஷ்மர் வாழ்க பீஷ்மர் வாழ்க என வாழ்த்திய வாழ்த்தொலி
உலகமே அதிர தேவவிரதன் பீஷ்மர் ஆனார்.

தொடரும்
__________________

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 5


சுயம்வரத்தில் பங்கு பெறுதல்
விண்ணும் மண்ணும் போற்றிய தேவவிரதன்
பீஷ்மர் என்றே ஆயினன் - மீனவ தலைவனும்
மகிழ்ந்தே நீரே வீரர் நீரே இவளின் தகப்பன்
நீரே இவளை உடன் அழைத்துச் சென்று
உம் தந்தையிடம் ஒப்படைபீர் என்றே
தன் அழகிய அன்பு மகளாம் சத்தியவதியை
பீஷ்மனுடனே அனுப்பினான்

தந்தைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்த
உத்தம புத்திரன் பீஷ்மன் சத்தியவதியுடன் வந்தே
தந்தையிடம் சேர்ப்பித்தான் அவளையே - மகிழ்ந்த
தந்தையும் சத்தியவதியை மணந்தே வாழ்ந்தனன்
நல் வாழ்க்கையை இனிமையுடன்

இல்லறமாம் நல்லறத்தில் இனிதே பெற்றனர்
மக்கள் இருவரை சித்திராங்கதன் முதல்வனும்
விசித்திரவீரியன் இரண்டாமவுனுமாகவே
இருவரும் நன்கே வளர்ந்தனர்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

சந்தனுவைத் தொடர்ந்து சித்திராங்கதன் ஆள
சித்திராங்கனும் கந்தர்வன் ஒருவனிடம் போர் புரிந்து மாள
அவன் சந்ததி அற்ற காரணத்தால்
இளவல் விசித்திர வீரியன் பட்டம் ஏற்க
பாலகன் என்ற காரணத்தால் தக்க வயது வரும் வரை
பீஷ்மரும் பரிபாலனம் செய்து வந்தார் ராஜ்யத்தை

இளவல் விசித்திரவீரியனும் பருவ வயதை எட்டினான்
திருமணம் செய்விக்க கருதியே காசி ராஜ்ஜியம் சென்றார்
காசி ராஜனின் மகள்களுக்கு சுயம்வரம் என்றே செய்திக் கேட்டு
பல தேசத்து ராஜகுமாரர்கள் அவையில் இருந்தனர்
தங்கள் பெயரினை சுயம்வரத்திற்கு கொடுத்து
பீஷ்மரும் தன் பெயரை கொடுக்க திகைத்தனர் அனைவரும்

முதுமை அடைந்தவரும் திருமணம் புரியமாட்டேன் என்றே
சபதம் ஏற்றவரும் இவர் ஏன் இங்கு வந்தார் இவருக்கேன்
திருமணம் என்றும் அனைவரும் இகழ்ந்தனர் பீஷ்மரை
பாவம், அவர்கள் அறியார், சொன்ன சொல் காக்கும் நம்
உத்தம வீரர் தன் தம்பியின் நிமித்தம் வந்தார் என்பதை

கன்னிகை மூவரும் கிழவர் என்றே பீஷ்மரை ஒதுக்க
கோபம் கொண்ட பீஷ்மரும் அனைவரையும் யுத்தத்துக்கு அழைத்து
அனைவரும் புறமுதுகிட்டு ஓட வீரன் சால்வன் மட்டும் விடாது தன்
திறமையை முடிந்த மட்டும் காட்டி இறுதியில் தோல்வியைத் தழுவ
கன்னிகைகள் மூவரையும் தேரில் ஏற்றி அஸ்தினாபுரம் அடைந்தார்