Saturday, November 8, 2008

சூரியன் விடும் தூது

அந்தி மயங்குகின்ற வேளை
அண்ணாந்து பார்த்தேன் வானத்தை
அழகான சூரியன் செந்நிறத்தில்
மேல்திசை நோக்கி செல்கிறான்

செல்லும் அவனிடம் சொன்னேன்
கொஞ்சும் மழலையாம் கவின்
என்
அன்புபேரன் அங்குள்ளான்
சொல்வாய் அவனிடம் என்வாழ்த்தை

செந்தாமரை அவன் முகம்
அதில் கொவ்வை செவ்வாய்
குமிழும் சிரிப்பு புன்சிரிப்பு
தவழும் நாளில் நானங்கே

நீ போய தெரிவி
என் வருகையை அங்கே
தொடர்ந்தே நானும் வருவேனே
கொஞ்சி பேசி விளையாட

ஆஹா என்றான் சூரியனே
சூரியனுக்கே சூரியன் தூதா
என்றே என்னிடம் கேட்டான்
ஆமாம் ஆமாம் என்றேன்

சூரியன் அங்கே சென்றானா
வாழ்த்தை நன்றாய் சொன்னானா
ஆவல் கொண்டே காத்துள்ளேன்
நாளைய சூரிய விடியலுக்கே

ஆஹா விடிந்தது பொழுதுமே
அன்பு சூரியன் வந்தானே
கவினை பற்றி சொன்னானே
தேனை காதில் பாய்ச்சினானே

இந்தா கவினின் அன்புமுத்தம்
என்றே தந்தான் சூரியனே
தெவிட்டா இன்பம் தந்தானே
தினமும் தருவேன் என்றானே

என் கண்ணில் மின்னியது
ஆயிரம் வாட்ஸ் பல்பு
முகத்தில் ஒளிர்ந்தது
முப்பத்திரண்டு பற்கள்

கவின் என் செல்லம்
அவன் தம் பெற்றோர்
அனைவரும் நலமுடன் வாழ
ஆயிரம் வாழ்த்து என் உள்ளத்தில்

4 comments:

The Anonymous said...

Poem is awesome!!

Lakshmi said...

Excellent.

C.A.vvag21 said...

really mind blowing n touching poem. It depicts your true n pure love for your wonderful grandson.
Pl do write more n more poems.
I am a NEW RAMA within you. luv u so much. Paddha

rama said...

Thankyou padda