Tuesday, November 30, 2010

புரிகிறதா உனக்கு

என் வீட்டில் உமி இருக்கு
உனக்கு நான் அதை தரவா
நீ என்ன தருவாய் எனக்கு
அவல் இருக்க உன் வீட்டில்
கொண்டு வாயேன் தோழி
என் வீடு வுமியையும்
உன் வீட்டு அவலையும்
ஒன்றாக சேர்த்தே
ஊதி ஊதி தின்னலாம்
என்ற காலம் தானே இப்போது
சொந்தமென்ன பந்தமென்ன
சுற்றம் என்ன நட்பு என்ன
எதுவுமே இல்லை
மண்ணிலே பிறந்து
மண்ணிலே வாழ்ந்து
மண்ணாக போவதற்கு
யாருமே தேவையில்லை
நெஞ்சமே ஆன்மாவின்
சொல் கேட்டு நீ நடந்தால்
துயரமே இல்லை எப்போதுமே
எனக்கு அந்த பலத்தை
நீ தருவாய்
துயர் வேண்டாம் என நான் நினைக்கவில்லை
துயர் கண்டு அஞ்சா நெஞ்சமும்
எதிர் கொள்ளும் துணிவும்
நீ அருள்வாய் எல்லோர்க்கும்
அதுவே நான் வேண்டுவது
எல்லாம் வல்ல இறைநிலையே
என் வேண்டல் உனக்கு புரிகிறதா?

Sunday, November 14, 2010

கவலை ஏனோ?

கவலை ஏனோ?

கவலை எனக்கு இல்லை என்று சொல்வாருண்டோ
கவலை இல்லை என்று கவலை படும் ஜன்மமும் உண்டு இங்கே
கவலை படுவதால் அது தீரும் என்பது உண்டோ
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வீணே மனதை கெடுக்கும்
கவலை வீணே உடலை கெடுக்கும்
அதுவே நம்மின் உயிர்க் குடிக்கும்
அப்புறம் நமக்கேன் கவலை
கவலை வேண்டாம் நண்பர்களே
நடந்தது நல்லேதே
நடப்பது நல்லதே
நடக்கும் நல்லதே
என்றே இருப்போம்
இன்றோடு அதனை
வழி அனுப்புவோம்

சின்ன சின்ன அணில் குட்டி

சின்ன சின்ன அணில் குட்டி
சிங்கார அணில் குட்டி
ராமர் வைத்தக் கோடுடன்
வாலை வாலை ஆட்டியே
அழகாக மரத்தில் ஏறி
அற்புதமாய் காய்த்திருந்த
கொய்யாக் காயை
கொறித்து கொறித்துத் தின்றது
ஒயிலாக நின்று அதை
கண்ணாரக் கண்டு நான்
என்னையே மறந்தேனே
அழகான் அந்த காட்சிக் கண்டு
அதன் பட்டு மேனித் தொட்டுப் பார்க்க
அளவில்லாத ஆசையே
ஆயினும் என் செய்வேன்
அது ஓடியே விட்டது
என்னை அது கண்டதும்

Wednesday, November 10, 2010

பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட்6

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்

மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .


பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட் 5

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்


மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .














Tuesday, November 9, 2010

பீஷ்மர் Part IV

தேவ விரதன் பீஷ்மர் ஆன கதை

மலருக்கு மலர் தாவும் வண்டென மன்னன் சந்தனுவும்
பெண்ணுக்கு பெண் தாவும் குணம் கொண்டவனோ
கங்கை பிரிந்ததும் மங்கை தந்த மகன் தனை
கண்ணும் கருத்துமாய் கொண்டாடி மறந்தனன் பெண்தனை
இருந்தும் விதி செய்த மாயமோ யமுனை அவன் வந்த காரணம்
கரையினிலே அவன் கண்ட பதுமையவளிடம் கொண்ட காதல்
காதலை அவளிடம் கனிவுடன் கூறி மங்கை நல்லாளின் ஒப்புதல்
வேண்ட மீனவ பெண் அவள் செம்படவ தலைவன் தன் தகப்பனை
காணச் சொல்ல அவள் அழகிலே மயங்கிய மன்னனும் உடனே
அத்தலைவனைக் கண்டு தன் விழைவினை கூற அவனுமே ஒரு
நிபந்தனை விதித்தான் யுவராஜா பட்டம் தன் மகளின் மகனுக்கு
கிடைக்குமெனில் அவன் விருப்பம் நிறைவேற்ற தனக்கேதும்
தடை இல்லையென்று, எட்டாக் கனியென நினைத்தே வழி நடந்தான்
நடைபிணம் போல் உலா வரும் தன்னருமை தந்தையின் நிலைக்
கண்டு குலைந்த மகன் ஏன் என்று கேட்க தான் கண்ட நிலவினையும்
கொண்ட காதலையும் அது எட்டாக் கனியான கதையும் சொல்ல
தந்தைக்கு வந்த துன்பம் தனக்கென வந்தது போல் நினைத்து
செம்படவத் தலைவனைச் சந்தித்து அவர் மகள் பால் தன் தந்தை
கொண்ட மையலை விவரித்து பெண் கேட்க, தன் இச்சைதனை
வெளியிட்ட தலைவனுக்கு தான் இன்றே யுவராஜா பட்டத்தை விட்டேன்
என் சொல்லியும், பேராசைக் கொண்ட தலைவனுமே மறுத்து
உன் பேரில் உள்ள நம்பிக்கை உன் வாரிசு பேரில் எனக்கு எப்படி வரும்
என்று வினவிய தலைவனை பார்த்து போட்டானே ஒரு சபதம்
திருமணம் எனக்கு இல்லை , ஆயுள் உள்ளவரை பிரம்மச்சாரி என்று
தேவவிரதனின் இத்தகு அற்புத செயலை கண்டு களித்த
தேவர்கள் பூமாரி பொழிந்து , முனிவர்களும் ஞானிகளும்
பீஷ்மர் வாழ்க பீஷ்மர் வாழ்க என வாழ்த்திய வாழ்த்தொலி
உலகமே அதிர தேவவிரதன் பீஷ்மர் ஆனார்.

தொடரும்
__________________

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 5


சுயம்வரத்தில் பங்கு பெறுதல்
விண்ணும் மண்ணும் போற்றிய தேவவிரதன்
பீஷ்மர் என்றே ஆயினன் - மீனவ தலைவனும்
மகிழ்ந்தே நீரே வீரர் நீரே இவளின் தகப்பன்
நீரே இவளை உடன் அழைத்துச் சென்று
உம் தந்தையிடம் ஒப்படைபீர் என்றே
தன் அழகிய அன்பு மகளாம் சத்தியவதியை
பீஷ்மனுடனே அனுப்பினான்

தந்தைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்த
உத்தம புத்திரன் பீஷ்மன் சத்தியவதியுடன் வந்தே
தந்தையிடம் சேர்ப்பித்தான் அவளையே - மகிழ்ந்த
தந்தையும் சத்தியவதியை மணந்தே வாழ்ந்தனன்
நல் வாழ்க்கையை இனிமையுடன்

இல்லறமாம் நல்லறத்தில் இனிதே பெற்றனர்
மக்கள் இருவரை சித்திராங்கதன் முதல்வனும்
விசித்திரவீரியன் இரண்டாமவுனுமாகவே
இருவரும் நன்கே வளர்ந்தனர்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

சந்தனுவைத் தொடர்ந்து சித்திராங்கதன் ஆள
சித்திராங்கனும் கந்தர்வன் ஒருவனிடம் போர் புரிந்து மாள
அவன் சந்ததி அற்ற காரணத்தால்
இளவல் விசித்திர வீரியன் பட்டம் ஏற்க
பாலகன் என்ற காரணத்தால் தக்க வயது வரும் வரை
பீஷ்மரும் பரிபாலனம் செய்து வந்தார் ராஜ்யத்தை

இளவல் விசித்திரவீரியனும் பருவ வயதை எட்டினான்
திருமணம் செய்விக்க கருதியே காசி ராஜ்ஜியம் சென்றார்
காசி ராஜனின் மகள்களுக்கு சுயம்வரம் என்றே செய்திக் கேட்டு
பல தேசத்து ராஜகுமாரர்கள் அவையில் இருந்தனர்
தங்கள் பெயரினை சுயம்வரத்திற்கு கொடுத்து
பீஷ்மரும் தன் பெயரை கொடுக்க திகைத்தனர் அனைவரும்

முதுமை அடைந்தவரும் திருமணம் புரியமாட்டேன் என்றே
சபதம் ஏற்றவரும் இவர் ஏன் இங்கு வந்தார் இவருக்கேன்
திருமணம் என்றும் அனைவரும் இகழ்ந்தனர் பீஷ்மரை
பாவம், அவர்கள் அறியார், சொன்ன சொல் காக்கும் நம்
உத்தம வீரர் தன் தம்பியின் நிமித்தம் வந்தார் என்பதை

கன்னிகை மூவரும் கிழவர் என்றே பீஷ்மரை ஒதுக்க
கோபம் கொண்ட பீஷ்மரும் அனைவரையும் யுத்தத்துக்கு அழைத்து
அனைவரும் புறமுதுகிட்டு ஓட வீரன் சால்வன் மட்டும் விடாது தன்
திறமையை முடிந்த மட்டும் காட்டி இறுதியில் தோல்வியைத் தழுவ
கன்னிகைகள் மூவரையும் தேரில் ஏற்றி அஸ்தினாபுரம் அடைந்தார்