Wednesday, November 10, 2010

பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட்6

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்

மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .


பிதாமகர் பீஷ்மம்ர் பார்ட் 5

அம்பை காசி ராஜனின் புத்திரிகளாம்
அம்பை அம்பிகா அம்பாலிகா,
மூவரையும் அழைத்து வந்த பீஷ்மர்
தன் தம்பிக்கு மணம் முடிக்க ஆவண செய்தார்
மாமணி மாளிகையும் மாவிலைத் தோரணமும்
ஆன்றோரும் சான்றோரும் மன்னர் பெருமக்களும்
பொதுமக்களும் அனைவரும் கூடி கோலாகல
பெருவிழாவாக நடக்க இருந்த தருணம்


மாப்பிள்ளையும் மணமகள்களும் மனையிலமரும் நேரம்
ஏளன நகைப்புடனே மங்கை அவள் அம்பை தன்
திருவாய் மலர்ந்தருளினாள் பீஷ்மரை நோக்கியே
தர்மத்தின் வழி நடக்கும் கங்கை புத்திரரே
உம்மிடம் நான் நியாயம் கேட்கிறேன் பதில் வேண்டியே
சௌபல தேசத்து மன்னனவன் சால்வனிடம் மனதை
பறிக்கொடுத்தேன் அவனையே மணாளனாக வரித்துவிட்டேன்,
உங்கள் பலாத்கார செயலால் இங்கு நிற்கிறேன்
சாஸ்திரம் அறிந்த உம்மிடமே விட்டு விட்டேன் முடிவை,
யாது செய்கிறீரோ செயும்மின் என்றே செப்பினள்.
சாஸ்திரம் அறிந்த பீஷ்மரும் அம்பையை அனுப்பினார்
தக்க துணையுடன் சால்வனிடம்
பின்னர் திருமணம் இனிதே நடந்தது
அம்பிகா அம்பாலிகா இருவரும் விசித்திர வீரியனின்
கரம் பிடித்தே ஆயினர் வாழ்க்கைத் துணைவிகளாய்

அம்பையும் சென்றாள் சால்வனிடம்
அரசே நீ தான் என் மணாளன் என்றே
வரித்துவிட்டேன் முன்பே,
உள்ளதைச் சொல்ல நல்லவர் அவரும்
அனுப்பினார் என்னையே உன்னிடம்
அரசே என்னை ஏற்பாய் உந்தன்
வாழ்க்கையில் துணையாக என்றே
வேண்டியே நின்றாள்

மங்கையே உன்னை நான் ஏற்கவே மறுக்கிறேன்,
மன்னர்கள் மத்தியில் என்னை வென்றே
உன்னை தன் வசமாக்கினார் பீஷ்மரும்
ஆதலின் பெண்ணே நீ திரும்பி விடு அவரிடமே
அவர் தம் ஆணையை ஏற்று விடு என்றனன்

பாவம் அவள் அம்பை மீண்டும் வந்தனள் அஸ்தினாபுரம்
பீஷ்மரை நோக்கியே நடந்ததை சொன்னதும்
பீஷ்மரும் கோரினார் விசித்திர வீரியனிடம்
சால்வனோ அம்பையை வரிக்கவில்லை எனவே
உனக்கு தடை ஏதுமில்லையே அம்பையை மணம் புரிய
க்ஷத்ரிய தர்மம் காக்கும் விசித்திரவீரியன்
வேறு ஒருவனை மனதினால் வரித்த கன்னிகையை
எப்படி நான் மணம் புரிவேன் மன்னித்தருள வேண்டினான்

வழி ஏதும் தோன்றாது அம்பை கதியற்ற என்னை
நீரே மணம் புரிவீர் என பீஷ்மரை வேண்ட
பெண்ணே நான் போட்ட சபதம் நீ அறியாத ஒன்றா
எப்படி மீறுவேன், என்னால் முடியாது என்றே கூறிய
பீஷ்மர் மீண்டும் ஒருமுறை தன் தம்பியை வேண்ட
முடிவை மறுத்த தம்பியின் பதில் கேட்டு
பெண்ணே நீ சால்வனிடமே திரும்புவாய் என்றே சொல்ல

கன்னிகை அவள் அச்தினாபுரத்திற்கும் சௌபல தேசத்திற்கும்
நடையாய் நடந்து தோல்வியே கண்டனள்
வருடங்கள் ஆறு ஓடியே விட்டது
வழி தான் ஏதுமே புலப்படவில்லை

தன் நிலைக்கு காரணம் பீஷ்மரே என்பதால்
மன்னர் பலரையும் வேண்டினள்
பீஷ்மரை போரிலே வென்று கொல்லும்படி
பீஷ்மரின் பலமறிந்த மன்னரும் மறுக்க

ஷண்முகனை குறித்து தவம் புரிய
சண்முகனும் கொடுத்தான் ஒரு மாலை
மாலை அதை யார் அணிந்தாலும் அவர்
பீஷ்மருக்கு எதிரி நிச்சயம் பீஷ்மரை வெல்வான் என
மாலையை பெற்று அனைத்து க்ஷத்திரியனையும் வேண்ட
அனைவரும் பீஷ்மருக்கு அஞ்சியே மறுத்தனர் மாலையைப் பெற

இறுதியில் துருபத மன்னரிடம் சென்று கேட்க
அவரும் மறுக்க அவர் மாளிகை வாசலிலே
மாலையை தொங்கவிட்டு வனம் ஏகினள்

முனிவர்கள் பலரிடம் தன் கதையை கூறி
வழியினை கேட்க முனிவர்கள் பரசுராமனை கைக்காட்ட
பரசுராமனை பீஷ்மரை போரில் வெல்ல அம்பையும் வேண்டினள்
பீஷ்மரிடம் போரிட்ட பரசுராமரும் தோற்க பெண்ணே நீ
பீஷ்மரையே சரணடைவாய் என்றே கூறிட

கோபம் ஒருபுறம், துயரம் ஒருபுறம் துக்கம் ஒருபுறம்
பாவம் அம்பை வருத்தத்தில் உடல் மெலிந்தாள்
இமயமலை சென்றே சிவனை சரணடைய
சிவனுமே இன்னொரு பிறவியும் உனக்குண்டு
நீயே பீஷ்மரை கொள்வாய் என்றே வரமும் பெற்றாள்

மகிழ்ந்த அம்பையும் உடனே மறுபிறவி எடுக்க வேண்டி
தீயினில் குதித்தே மாண்டாள், துர்பத மன்னனின் புத்திரியாய்
மறுபிறப்பு பெற்று யாரும் தீண்டா வாசலில் கிடந்த மாலையை அணிய
பீஷ்மரின் விரோதம் வேண்டவே வேண்டாம் என்றே மகளை
துரத்தியே அனுப்பினான் வனத்துக்கே

வனம் சென்ற கன்னி அவள் தவம் செய்து ஆணாக மாறி
சிகண்டி என்றே பெயரும் கொண்டே வீரனாக மாறி
பாரத போரிலே அர்ஜுனனின் சாரதியாகி
பீஷ்மருக்கு எதிரியாகி பீஷ்மரும் வீழ்ந்தார்
யுத்த களத்திலே அம்பையின் கோபமும் தணிந்தது
சிகண்டியின் பிறப்பு பெண் பிறவி என்று அறிந்தே
பீஷ்மரும் அவனை தாக்காமல் சிகண்டியை
முன் நிறுத்தி அர்ஜுனனும் வீழ்த்தினான் பீஷ்மரை
கீழே வீழ்ந்த பீஷ்மரும் ஒவொரு அம்பாக எடுத்தே
இது அர்ஜுனன் எய்த அம்பு சிகண்டியினுடையது அல்ல
என்றே பூமியில் சாய்ந்தார்.

சாகா வரம் பெற்ற பீஷ்மர் தன் முடிவு நாளை தானே முடிவு செய்து
கண்ணன் தரிசனம் பெற்றே வானகம் சென்றார்.

பீஷ்மர் கதை முற்றிற்று .














No comments: