Tuesday, November 9, 2010

பீஷ்மர் Part IV

தேவ விரதன் பீஷ்மர் ஆன கதை

மலருக்கு மலர் தாவும் வண்டென மன்னன் சந்தனுவும்
பெண்ணுக்கு பெண் தாவும் குணம் கொண்டவனோ
கங்கை பிரிந்ததும் மங்கை தந்த மகன் தனை
கண்ணும் கருத்துமாய் கொண்டாடி மறந்தனன் பெண்தனை
இருந்தும் விதி செய்த மாயமோ யமுனை அவன் வந்த காரணம்
கரையினிலே அவன் கண்ட பதுமையவளிடம் கொண்ட காதல்
காதலை அவளிடம் கனிவுடன் கூறி மங்கை நல்லாளின் ஒப்புதல்
வேண்ட மீனவ பெண் அவள் செம்படவ தலைவன் தன் தகப்பனை
காணச் சொல்ல அவள் அழகிலே மயங்கிய மன்னனும் உடனே
அத்தலைவனைக் கண்டு தன் விழைவினை கூற அவனுமே ஒரு
நிபந்தனை விதித்தான் யுவராஜா பட்டம் தன் மகளின் மகனுக்கு
கிடைக்குமெனில் அவன் விருப்பம் நிறைவேற்ற தனக்கேதும்
தடை இல்லையென்று, எட்டாக் கனியென நினைத்தே வழி நடந்தான்
நடைபிணம் போல் உலா வரும் தன்னருமை தந்தையின் நிலைக்
கண்டு குலைந்த மகன் ஏன் என்று கேட்க தான் கண்ட நிலவினையும்
கொண்ட காதலையும் அது எட்டாக் கனியான கதையும் சொல்ல
தந்தைக்கு வந்த துன்பம் தனக்கென வந்தது போல் நினைத்து
செம்படவத் தலைவனைச் சந்தித்து அவர் மகள் பால் தன் தந்தை
கொண்ட மையலை விவரித்து பெண் கேட்க, தன் இச்சைதனை
வெளியிட்ட தலைவனுக்கு தான் இன்றே யுவராஜா பட்டத்தை விட்டேன்
என் சொல்லியும், பேராசைக் கொண்ட தலைவனுமே மறுத்து
உன் பேரில் உள்ள நம்பிக்கை உன் வாரிசு பேரில் எனக்கு எப்படி வரும்
என்று வினவிய தலைவனை பார்த்து போட்டானே ஒரு சபதம்
திருமணம் எனக்கு இல்லை , ஆயுள் உள்ளவரை பிரம்மச்சாரி என்று
தேவவிரதனின் இத்தகு அற்புத செயலை கண்டு களித்த
தேவர்கள் பூமாரி பொழிந்து , முனிவர்களும் ஞானிகளும்
பீஷ்மர் வாழ்க பீஷ்மர் வாழ்க என வாழ்த்திய வாழ்த்தொலி
உலகமே அதிர தேவவிரதன் பீஷ்மர் ஆனார்.

தொடரும்
__________________

No comments: