Sunday, November 14, 2010

சின்ன சின்ன அணில் குட்டி

சின்ன சின்ன அணில் குட்டி
சிங்கார அணில் குட்டி
ராமர் வைத்தக் கோடுடன்
வாலை வாலை ஆட்டியே
அழகாக மரத்தில் ஏறி
அற்புதமாய் காய்த்திருந்த
கொய்யாக் காயை
கொறித்து கொறித்துத் தின்றது
ஒயிலாக நின்று அதை
கண்ணாரக் கண்டு நான்
என்னையே மறந்தேனே
அழகான் அந்த காட்சிக் கண்டு
அதன் பட்டு மேனித் தொட்டுப் பார்க்க
அளவில்லாத ஆசையே
ஆயினும் என் செய்வேன்
அது ஓடியே விட்டது
என்னை அது கண்டதும்

No comments: