Tuesday, November 30, 2010

புரிகிறதா உனக்கு

என் வீட்டில் உமி இருக்கு
உனக்கு நான் அதை தரவா
நீ என்ன தருவாய் எனக்கு
அவல் இருக்க உன் வீட்டில்
கொண்டு வாயேன் தோழி
என் வீடு வுமியையும்
உன் வீட்டு அவலையும்
ஒன்றாக சேர்த்தே
ஊதி ஊதி தின்னலாம்
என்ற காலம் தானே இப்போது
சொந்தமென்ன பந்தமென்ன
சுற்றம் என்ன நட்பு என்ன
எதுவுமே இல்லை
மண்ணிலே பிறந்து
மண்ணிலே வாழ்ந்து
மண்ணாக போவதற்கு
யாருமே தேவையில்லை
நெஞ்சமே ஆன்மாவின்
சொல் கேட்டு நீ நடந்தால்
துயரமே இல்லை எப்போதுமே
எனக்கு அந்த பலத்தை
நீ தருவாய்
துயர் வேண்டாம் என நான் நினைக்கவில்லை
துயர் கண்டு அஞ்சா நெஞ்சமும்
எதிர் கொள்ளும் துணிவும்
நீ அருள்வாய் எல்லோர்க்கும்
அதுவே நான் வேண்டுவது
எல்லாம் வல்ல இறைநிலையே
என் வேண்டல் உனக்கு புரிகிறதா?

No comments: