Monday, December 6, 2010

thuriya thavam

நாம் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். பெறற்கரிய பேறு பெற்று இருக்கிறோம். இறைநிலையே தன்மாற்றம் அடைந்து பஞ்ச பூதங்களாக ஓரறிவு முதல் ஐந்தறிவு விலங்கினம் வரை வந்து ஆறறிவு கொண்ட மனிதனாக வந்து இருக்கிறோம். ஆறாவது அறிவு என்பது என்ன? பகுத்தறியும் திறன் தான். இத்திறன் கொண்டு தான் வியத்தகு விஞ்ஞான வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி உள்ளது என்ன ? வாழ்வின் நோக்கம். வாழ்வின் நோக்கம் என்ன ? எங்கு இருந்து வந்தோமோ அங்கேயே திரும்பி போவது தான். எங்கு இருந்து வந்தோம்? இறைநிலையில் இருந்து தான். நாம் நம் அழகை கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல் இறைவன் தன அழகை தானே ரசிப்பதற்காக இவ்வாறு பலவிதமாக உருவெடுத்து வந்ததாக சொல்வதுண்டு . பொருள் வாங்கி வர கடைக்கு செல்கிறோம். மீண்டும் வீட்டுக்கு வருவதில்லையா அது போல் தான் இந்த மனித உடலோடு பூமிக்கு வந்தது தற்காலிகமாக தான் மீண்டும் நாம் வந்த இடத்துக்கே சென்றாக வேண்டும். அனைவரும் அப்படி தான் செல்வோம். ஆனால் அதற்கான கால அவகாசம் தான் வித்தியாசப்படும். சரி. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? அழகான வழிமுறைகளை நம் ஆசான் அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள் அழகாக வகுத்து கொடுத்துள்ளார் அதன் வழி நடக்க வேண்டியதே.


நாம் பிறக்கும்போதே பெற்றோர்கள் வழியாக அதற்கும் முந்தைய மூதாதையர் வழியாக பதிவுகளோடு தான் பிறந்து இருக்கிறோம். போதாதற்கு நாம் பிறந்த முதற்கொண்டு இன்று வரை எத்தனையோ செயல்கள் புரிந்து அதனையும் பதிவு செய்து வைத்து இருக்கிறோம் இப்பதிவுகள் நல்லதோ தீயதோ அதனையும் கழித்தாக வேண்டும், தீய பதிவுகளாக நிறைய வைத்திருந்தால் கழுதை மாதிரி உதைகிறோம், குரங்கு மாதிரி நடந்து கொள்கிறோம், தேள் மாதிரி கொட்டுகிறோம் நாய் மாதிரி குரைக்கிறோம் எல்லா விலங்கின பதிவுகளும் சேர்ந்து தான் வைத்திருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான அனைத்து உயிரினங்களின் பதிவுகளும் கொண்டது தான் இந்த மனித பிறவி. இந்த பதிவுகள் அனைத்தும் சேர்ந்து தான் நாம் வந்த நோக்கத்தை மறந்தி புலன் வழி செயல்பட்டு மீண்டும் பதிவுகளை கூடிக் கொண்டே இருக்கிறோம். புலன் மயக்கத்தில் சிக்கிய மனம் கூடவே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் ஆகிய ஆறு குணங்களை வளர்த்து கொள்கிறது. அதன் தொடர்ச்சியாக ஐந்து பெரும் பழி செயல்களையும் அதாவது பொய் களவு, சூது, கொலை, கற்பழிப்பு முதலியவைக்கும் வழி வகுக்கிறது.

எனவே அறநெறியைப் பின்பற்றி வாழும்போது, இத்தகைய பழிசெயல்கள் நம்மை அணுகாது.


இதற்க்கு முதலில் நாம் நம் மனதை பழக்க வேண்டும் . அதற்காகவே இந்த தான முறைகள், தற்சோதனை உடல் பயிற்சி ஆகியவைகள் நமக்கு அருள் தந்தை அவர்களால் வழங்கப்பட்டுள்ளது எளிய முறை குண்டலினி யோகமாக. இதில் முதலில் உடலை சீராக வைத்துக்கோலா உடல் பயிற்சியும் உயிரை வலமாக வைத்துக் கொள்ள காய கல்ப பயிற்சியும் மனதை வளபடுத்த த்யானம் தற்சோதனையும்.

த்யானம் செய்வதற்கு தக்க ஆசானால் தீட்சை கொடுக்கபடுகிறது, இது முறையே ஸ்பரிச தீட்சை (கோழி தன முட்டையை அடைகாத்து குஞ்சு பொரிப்பது போல்)சச்சு தீட்சை அல்லது நயன தீட்சை (மீன் தன முட்டைகளை பார்வையாலேயே குஞ்சு பொரிப்பது போல்) கொடுக்க படுகிறது. ஸ்பரிச தீத்சை அகின்னை தீட்சையாகவும், நயன தீட்சை துரிய தீட்சையாகவும் கொடுக்கபடுகிறது. இதில் ஆசிரியர் தன கண்களில் ஆற்றலை வரவழைத்து தன அருட்ப பார்வையால் தீட்சை கொடுப்பார். ஐம்புலனாக விரித்தே பழகிய மனம் ஆகினை தீட்சையில் ஒரே புலனாக சுருங்கி நின்றது துரிய தவத்தில் அப்புலனும் மறைந்து மனம் மூல நிலையான உய்ராகவே நிற்கும். உயிர் உயிராக நின்றால் தனது அடக்கத்தில் பிரமம்மாக இரைநிலைஆக அமைதி பெறுவதற்கு துரியத்தில் தயாராகிறது . இந்த தவம் துரிய தவம் என்றும், சஹாஸ்ராதார யோகம் என்றும் அழைக்கப்படும். சகஸ்ரம் என்றால் ஆயிரம் அதாவது நமது மூலையிலே ஆயிரக்கணக்கான பணிச் சிற்றறை இயக்க மையங்கள் உள்ளன. ஒவொவொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல சிற்றறைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் .


மகரிஷி இது குறித்து கவி புனைந்துள்ளார்


உச்சியிலே நீ சென்றால் உடனே காணும்

ஒரு அதிசயம் வலமாம் சுற்று ஆகும்

அச்சமயம் அறிவிற்கோர் வியப்பு காணும்

அவ்விடத்தே நிலைத்திருக்கப் பழகிவிட்டால்

இச்சைஎல்லாம் பிறக்குமிடம் கண்டு கொள்வாய்.

எது வேண்டும் வேண்டாம் என்று இரண்டுங்கண்டு

நச்சுவிளை இச்சைஎல்லாம் அழித்துவிட்டு

நலம் ஈயும் எண்ணமே மீதங் கொள்வாய்


ஆக்கினை தவம் செய்துவிட்டு துரிய நிலை தவத்திற்கு உச்சியில் நினைவை செலுத்தும்போது உயிர் சக்தி மூலையில் உள்ள சிற்றரைகளுக்கெல்லாம் ஊடுருவி போகும். அந்த ஓட்டமானது இனிமையாக இருக்கும். ஒவொருவருக்கு ஒவொரு விதமாக இருக்கும். சாதாரணமாக மூலையில் இருக்கும் சிற்றறைகளில் மிக குறைந்த பகுதியையே நாம் பயன்படுத்துகிறோம். மற்றவை பயன்பாடிற்கு வராது. துரிய தவம் இயற்ற அவை ஒவ்வொன்றாக செயலுக்கு வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது இறைநிலையோடு தொடர்பு கிடைத்து இன்டூஷன் எனும் உள்ளுணர்வு கிடைக்கும்.

துரிய தவம் புரிய புரிய

௧) ஆன்மா பழி செயல் பதிவுகளில் இருந்து தூய்மை பெறும். நடுமனத்தை வெற்றி கொள்கிறது. நாம் என்னும் உயரிய எண்ணம் பல பேர் உள்ளத்தில் பிரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கல்பம் மற்றும் வாழ்த்துக்கள் நன்கு செயல்படும். மனதிருக்கு வேகமும், நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயபடாத நிலையம் கிடைக்கும் என்னத்தை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துணை புரியும். தன்வினையில் இருந்தும் விடுவிக்கபடுவோம். உள்ள களங்கமும், உடல் களங்கமும் துடைக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது .

No comments: