Tuesday, December 28, 2010

வாழ்க்கை தத்துவம் - 1

வாழ்க்கை தத்துவம் - 1

வாழ தெரிய வேணும் கண்ணே வாழ தெரிய வேணும்
தெரிந்து கொள்ள முயலனும் கண்ணே
தெரிந்து கொள்ள முயலனும்
தேவை நமக்கு என்ன வென்றே
இருக்க இடமும் உடுக்க உடையும்
பசிக்கு உணவும் தாகத்துக்கு நீரும்
தானே அவசிய தேவை என்று
தெரிந்து கொள்ள வேணும்

மழையில் இருந்தும் வெயில்லில் இருந்தும்
காத்துக்க வேணும் அதுக்கு
வசிக்க ஒரு வீடு போதும்
பல வீடு எதுக்கு கண்ணே
அது கொள்ளைக்கு சமமாகும் புரிஞ்சிக்கோ

வெப்ப தட்ப மாறுதலுகேற்றபடி
உடை வேணும் கண்ணே உடை வேணும்
தேவைக்கு உடை போதும்
படோடோபதுக்கு எதற்கும் கண்ணே
அதையுமே புரிஞ்சிக்கோ கண்ணே புரிஞ்சிக்கோ

பசிக்கு உணவு வேணும் கண்ணே
அளவுக்கு மீறினா அதுவுமே விஷந்தா கண்ணே
அளவோடு சத்தோடு ஆரோக்கியமான உணவோடு
நீரையும் சாப்பிடு கண்ணே
அளவுக்கு அதிகமானா
உடல் நலத்துக்கு கேடு கண்ணே

புரிஞ்சிக்கோ கண்ணே புரிஞ்சிக்கோ
இதை புரிஞ்சிண்டு நீயும் நடந்துக்கிட்ட
உனக்கு புடிச்சிருந்தா இன்னு நான்
சொல்றேன் கண்ணு அடுத்த நூலிலே
கேட்டுக்கோ கண்ணே கேட்டு நடந்துக்கோ

No comments: