Friday, October 29, 2010

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 1


அஸ்தினாபுரத்து மகா ராஜா சந்தனு என்றே பெயர்க் கொண்டே
அந்தி மயங்கிய வேளையிலே கங்கைக் கரையில் நின்றபடி
கங்கையின் எழிலை ரசிக்கையிலே
கண்டான் அழகே உருவான தேவதை ondrai
கொண்டான் காதல் அவள் எழிலில் மயங்கியே

கங்கையே அங்கு எழிலுருவாய் மானிடப் பெண்ணாய்
நிற்பதை அறியா சந்தனு காதலில் வயப்பட்டே
என் உயிர் என் உடல் என் தனம் என் அரசு அனைத்தும் உனக்கே
என்னை நீ மணம் புரிவாய் என்றே கெஞ்சினன்

உன்னை மணம் புரிவேன் ஆயின் இரு நிபந்தனை
சரியா என்று கேட்க காதலின் மோகத்தில் சரியென சொல்ல
கங்கையும் சொன்னாள் தன்னை யார் என கேட்கவும் கூடாது
தன் செயல் எதுவானாலும் ஏன் என கேட்கவும் கூடாது

காதலின் வயப்பட்ட சந்தனுவும் கங்கையின் நிபந்தனை தன்னை
மறுக்காமல் ஒப்புதல் அளித்தே மணமும் கொண்டான் அவளையே
இல்லறம் என்ற நல்லறத்தை இனிதே நடத்திய இருவருமே
அன்பில் திளைத்து ஆனந்தத்தில் மூழ்கிய தருணம்

கங்கையும் பெற்றாள் ஏழுக் குழந்தைகளை பெற்றதும்
குழந்தைகள் அனைவரையும் கங்கையில் தூக்கியே எறிந்துவிட்டாள்
கொடுத்த வாக்கிற்கிணங்கி மௌனமே காத்தான் சந்தனு மகாராஜா
மனதினில் பாரம் அழுத்தியது காரணம் ஏன் என புரியாமல்

நாட்கள் சென்றன கங்கையும் ஈன்றாள் எட்டாம் குழந்தை
ஈன்றதும் எடுத்தாள் குழந்தையை கங்கையில் வீச
பொறுமை இழந்த அரசனுமே காரணம் கேட்டே தடுக்க
கோபம் கொண்டாள் கங்கையவள் நோக்கினாள் அரசனை

வாக்குத் தவறி விட்டாய் மன்னா இனி நான் செல்கிறேன்
குழந்தையை நானே வளர்ப்பேன் சிறிது காலம்
பின்னர் ஒப்படைக்கிறேன் உன்னிடம் என்றே கூறி
கங்கையும் தன் இருப்பிடம் சென்று விடடாள்

No comments: