அஸ்தினாபுரத்து  மகா ராஜா சந்தனு என்றே பெயர்க் கொண்டே  
அந்தி மயங்கிய வேளையிலே கங்கைக் கரையில் நின்றபடி  
கங்கையின் எழிலை ரசிக்கையிலே 
கண்டான்  அழகே உருவான தேவதை ondrai 
கொண்டான் காதல் அவள் எழிலில் மயங்கியே  
கங்கையே அங்கு எழிலுருவாய்  மானிடப் பெண்ணாய்  
நிற்பதை அறியா சந்தனு  காதலில் வயப்பட்டே 
என் உயிர் என் உடல் என் தனம் என் அரசு அனைத்தும் உனக்கே 
என்னை நீ மணம் புரிவாய்  என்றே கெஞ்சினன்
உன்னை மணம் புரிவேன் ஆயின் இரு நிபந்தனை 
சரியா என்று கேட்க காதலின் மோகத்தில் சரியென சொல்ல 
கங்கையும் சொன்னாள் தன்னை யார் என கேட்கவும் கூடாது 
தன் செயல் எதுவானாலும் ஏன் என கேட்கவும் கூடாது 
காதலின் வயப்பட்ட சந்தனுவும் கங்கையின் நிபந்தனை தன்னை 
மறுக்காமல்   ஒப்புதல் அளித்தே மணமும் கொண்டான் அவளையே 
இல்லறம் என்ற நல்லறத்தை இனிதே நடத்திய இருவருமே 
அன்பில் திளைத்து ஆனந்தத்தில் மூழ்கிய தருணம் 
கங்கையும் பெற்றாள் ஏழுக் குழந்தைகளை  பெற்றதும் 
குழந்தைகள் அனைவரையும் கங்கையில் தூக்கியே எறிந்துவிட்டாள்
கொடுத்த வாக்கிற்கிணங்கி மௌனமே காத்தான் சந்தனு மகாராஜா
மனதினில் பாரம் அழுத்தியது காரணம் ஏன் என புரியாமல் 
நாட்கள் சென்றன கங்கையும் ஈன்றாள் எட்டாம் குழந்தை 
ஈன்றதும் எடுத்தாள் குழந்தையை கங்கையில் வீச 
பொறுமை இழந்த அரசனுமே காரணம் கேட்டே தடுக்க 
கோபம் கொண்டாள் கங்கையவள்  நோக்கினாள் அரசனை
வாக்குத்  தவறி விட்டாய் மன்னா  இனி நான் செல்கிறேன் 
குழந்தையை நானே  வளர்ப்பேன் சிறிது காலம் 
பின்னர்  ஒப்படைக்கிறேன் உன்னிடம் என்றே கூறி 
கங்கையும் தன் இருப்பிடம் சென்று விடடாள்
 
No comments:
Post a Comment