குருக்ஷேத்ரப் போர் முடிந்தது 
தருமரும் அரியணை ஏறினார் 
பட்டம் ஏற்றப் பின் 
ராஜ சூய வேள்வியும் நடந்தது 
வேள்வி  முடிந்து அனைவரும்
கலைந்த பின் வேள்வியைப் பற்றி 
புகழ் மாலைகள் பல வந்து  
குவிந்த வண்ணம் இருந்தது 
கேள்விப் பட்ட கீரி ஒன்று 
வேள்வி நடந்த இடத்தில் 
புரண்டு புரண்டு வந்தது 
ஆனால் ஆயாசத்துடன் 
உச் உச் என்றது  அதைப் 
பார்த்த தர்மரும் கீரியை
அழைத்து அணைத்து பரிவுடன் 
என்ன வேண்டும் என்று கேட்க 
ஹூம் உம்மால் முடியாது 
என்றது கீரி - வியப்புடன் 
தருமரும் கீரியைப் பார்க்க 
கீரி சொன்னது தன கதையை 
அய்யா தர்மரே என்னைப் பாரும் 
என் ஒரு பக்கத்  தங்க நிறத்தை 
உமது அரிய பெரிய குணங்களைக் 
கேட்டு ஆவலாய் வந்தேன் - 
ஏமாற்றமே மிச்சம் என ஆரம்பித்த 
கீரியை பார்த்தார் வியப்பு நீங்காமலே 
புரியவில்லை விளக்கமாக சொல் 
என கீரியை கேட்க அதுவும் சொன்னது 
நான் ஒரு வயோதிக தம்பதியினரின் 
வீட்டில் கண்டேன்ஒரு காட்சி
வயது முதிர்ந்த பெற்றோருடன் 
இருந்தனர்  இரு பிள்ளைகள். 
அன்றைய உணவு திணைமா தான் 
உணவு அருந்த அமர்ந்த போது
ஒரு அந்தணர் வந்தார் அங்கே
பசி என சொல்லி இளைப்பாற 
கொஞ்சம் கேட்டார்.  
வயதில் மூத்த பெரியவர் மற்றவர்
கொடுக்க முன் வந்தும் தன்
பங்கினை முன்னம் ஈந்தார் 
போதவில்லை என்று மீண்டும் கேட்க 
அம்முதியவர் மனைவி தன் பங்கை ஈந்தார்.
மீண்டும் மீண்டும் என்று கேட்ட போது 
அப்பிள்ளைகள் இருவரும் தம் 
பங்கை ஈந்தனர். 
நால்வரும் தான் தான் கொடுப்பேன் 
தான் தான் கொடுப்பேன் என்று 
போட்டியிட்டு அனைவரும் தம் தம் 
பங்கை கொடுக்க 
அந்தணர் ரூபத்தில் வந்த 
இறைவனும் அவர்களை 
அழகான விமானத்தில் வைகுந்தம் 
அழைத்துச் சென்றார்.
அங்கே சிந்திய மாவில் புரண்டதில் 
ஒரு பாதி பொன்னிறம் ஆயிற்று
 மறு பாதிக்கு இங்கு வந்தேன் 
இப்போது சொல் அரசே 
நான் கேட்டதை உன்னால் 
கொடுக்க முடியுமா என்றே
கீரியும் கேட்டது தருமரை
வெட்கத்தினால் தலை குனிந்தார் 
 தருமருமே 
 
No comments:
Post a Comment