Friday, October 8, 2010

ரசனை

இயற்கையின் அழகே அழகு,
விடியற்காலை பறவையின் கீச் கீச் ஒலி செவிக்கழகு
தோட்டத்து பூக்களின் வித வித வண்ணம் அழகோ அழகு
பூவினை சுற்றும் வண்ணத்து பூச்சியும் அழகு
மரத்தில் காய்த்துத் தொங்கும் கனிகளோ மிக அழகு
காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அழகு தான் என்ன
பசு தன் கன்றை நாவால் தடவிக் கொடுக்கும் தாய்மையும் அழகு
யாரை ஏமாற்றலாம் என்று பார்த்துக் கொண்டு நிற்கும் பூனையும் அழகு
போடுவது ஒரு சிறு பிஸ்கட் துண்டு ஆனாலும் நாய் வாலை ஆட்டும் அழகே அழகு
இன்னும் எத்தனை எத்தனை அழகுகள் இயற்கைக்கு
அனைத்தையும் ரசிக்க நேரம் தான் இல்லையே
வீணாக்க வேண்டாமே ஒரு க்ஷண பொழுதையும்
இனி காணலாம் கண் கொண்டு எதிரில் நடக்கும் நிகழ்ச்சியை
ரசிப்போம் அனுபவிப்போம் கொண்டாடுவோம்.

No comments: