Wednesday, October 20, 2010

காற்று

காற்றிடமிருந்தே கற்பது என்ன
காற்றில்லாத இடமும் உண்டோ
உணவே இல்லாவிட்டாலும் ஏன்
நீரே இல்லாவிட்டாலும்
ஒரு சில மணிகள் உயிர் வாழலாம்
ஆனால் காற்றின்றி எப்படி வாழ்வோம்

காற்று எங்குதான் செல்லட்டுமே
நறுமணமிக்க பூக்களின் தோட்டத்தில்
நறுமணத்தை பரப்பும்
அழுகிய குப்பைகள் இருக்குமிடத்தே
துர்நாற்றத்தை பரப்பும்

நாற்றமும் துர்நாற்றமும்
பாதிப்பது நம்மையே ஆனால்
காற்றுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை
அப்பழுக்கற்ற காற்றைப்போல்
ஆத்மஸ்வரூபமும் சரீர குணங்களால்
பாதிக்கப்படுவதில்லை

இதுவே காற்று கற்பிக்கும் பாடம்
உணர்ந்தே நாமும் வாழுவோம்
காற்றை போல்
காற்றின் குணாதிசயத்துடன்

No comments: