காற்றில்லாத இடமும் உண்டோ 
உணவே இல்லாவிட்டாலும்  ஏன் 
நீரே இல்லாவிட்டாலும் 
ஒரு சில மணிகள் உயிர் வாழலாம்  
ஆனால் காற்றின்றி எப்படி வாழ்வோம் 
காற்று எங்குதான் செல்லட்டுமே 
நறுமணமிக்க பூக்களின் தோட்டத்தில் 
நறுமணத்தை பரப்பும்  
அழுகிய குப்பைகள் இருக்குமிடத்தே
துர்நாற்றத்தை பரப்பும் 
நாற்றமும் துர்நாற்றமும் 
பாதிப்பது நம்மையே ஆனால் 
காற்றுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை 
அப்பழுக்கற்ற காற்றைப்போல் 
ஆத்மஸ்வரூபமும் சரீர குணங்களால் 
பாதிக்கப்படுவதில்லை 
இதுவே காற்று கற்பிக்கும் பாடம் 
உணர்ந்தே நாமும் வாழுவோம்
காற்றை போல் 
காற்றின் குணாதிசயத்துடன்  
 
No comments:
Post a Comment