Thursday, October 21, 2010

சூரியன்

மாபெரும் நெருப்பு கோளம்
பூமியை விடவும் பெரியது
காலையில் கிழக்கே தோன்றி
மாலையில் மேற்க்கே மறையும்
கிழக்குக்கும் மேற்குக்கும் பயணிக்கும்
ஆரஞ்சு வண்ணம் கொண்ட சூரியனே
கோள்களில் ஒன்றான உன்னால்
இம்மானுடமும் உயிரினங்களும் அடையும்
பயன் தான் எண்ணிலும் அடங்குமோ
தாமரை மலர்வதும் பயிர்கள் செழிப்பதும்
உன் செயலால் அன்றோ
பூமியில் இருந்தே நீரதை குடித்தே
மீண்டும் மழையாய் பொழிவிக்கும்
பொழித்து பூமியை செழிப்பாக்கும்
செழிப்பாக்கி உயிர்களை வாழ வைக்கும்
உந்தன் கருணை தான் என்ன
தான் பெற்றதை தனக்கு தானே
என்று இல்லாமல் அனைவருக்கும்
பகிர்ந்து அளித்து மகிழ மகிழ்விக்க
நீ கூறும் நல்லுபதேசமோ
சொல்வாய் சூரியனே
உன் தாள் பணிகிறேன்
இவ்வுலகில் அனைவரும் நலமாய் வழ
தொடரட்டும் உன் இனிய பணியே

No comments: