மாபெரும் நெருப்பு கோளம் 
பூமியை விடவும் பெரியது 
காலையில் கிழக்கே தோன்றி 
மாலையில்  மேற்க்கே  மறையும் 
கிழக்குக்கும் மேற்குக்கும் பயணிக்கும் 
 ஆரஞ்சு வண்ணம் கொண்ட சூரியனே 
கோள்களில் ஒன்றான  உன்னால்  
இம்மானுடமும் உயிரினங்களும் அடையும் 
பயன் தான் எண்ணிலும் அடங்குமோ 
தாமரை மலர்வதும்  பயிர்கள் செழிப்பதும் 
உன் செயலால் அன்றோ 
பூமியில் இருந்தே நீரதை குடித்தே 
மீண்டும் மழையாய் பொழிவிக்கும்
பொழித்து பூமியை செழிப்பாக்கும் 
செழிப்பாக்கி உயிர்களை வாழ வைக்கும் 
உந்தன் கருணை தான் என்ன 
தான்  பெற்றதை தனக்கு தானே 
என்று இல்லாமல் அனைவருக்கும் 
பகிர்ந்து அளித்து மகிழ மகிழ்விக்க 
 நீ கூறும் நல்லுபதேசமோ 
சொல்வாய் சூரியனே 
உன் தாள் பணிகிறேன் 
இவ்வுலகில் அனைவரும் நலமாய் வாழ
தொடரட்டும் உன் இனிய பணியே 
 
No comments:
Post a Comment