Monday, October 25, 2010

எதையும் மதிப்போம்

நாம் உயர்வாக இருக்கும்போது
நம் உயர்வில் கர்வம் கொள்ளலாம்
பிறரை தாழ்வென்று எண்ணுதற்கு
நமக்கேது உரிமை
பிறரிலும் பல திறமை இருக்கலாம்

நம் மதம் சிறந்ததாக இருக்கலாம்
பிறர் மதத்தை இழிவு படுத்த நாம் யார்
அணைத்து மதங்களும் ஒரே போதனையை
சொல்லும்போது
பாதைகள் வேறாகலாம்
ஆனால் சேரிடம் ஒன்றன்றோ

இறைவனின் படைப்பில் நாம் பெரும்
அறிவுரைதான் எத்தனையோ இருக்க
புழுவையும் மதிக்க நாம் கற்றுக்
கொள்ள வேண்டுமே

No comments: