நாம் உயர்வாக இருக்கும்போது 
நம் உயர்வில் கர்வம் கொள்ளலாம் 
பிறரை தாழ்வென்று எண்ணுதற்கு 
நமக்கேது உரிமை 
பிறரிலும் பல திறமை இருக்கலாம் 
நம் மதம் சிறந்ததாக இருக்கலாம் 
பிறர் மதத்தை இழிவு படுத்த நாம் யார் 
அணைத்து மதங்களும் ஒரே போதனையை 
சொல்லும்போது 
பாதைகள் வேறாகலாம் 
ஆனால் சேரிடம் ஒன்றன்றோ 
இறைவனின் படைப்பில் நாம் பெரும் 
அறிவுரைதான் எத்தனையோ இருக்க 
புழுவையும் மதிக்க நாம் கற்றுக் 
கொள்ள வேண்டுமே 
 
No comments:
Post a Comment