Thursday, October 21, 2010

மலைப்பாம்பு - ஒரு குரு (இயற்கை நமது குரு)


மலைப் பாம்பு எத்தனை நீளம் எத்தனை பருமன்
அதன் எடையோ மிக மிக அதிகம்
உடலுக்கேற்ற உணவு தேவையோ மிக அதிகம்
ஆனாலும் தானாக இரைத் தேடித் போவதில்லை
தனை நோக்கி வரும் பொருளை இரையாகக் கொள்கிறது
மலைப் பாம்பு முட்டையிட அதை காத்து குட்டி வரும்வரை
அது பட்டினியே கிடக்குதப்பா, தனை நாடி உணவேதும்
வாராத போதும் தன குட்டிக்காக பசி பொருக்குதப்பா
உணவேதும் கிடைக்கலேன்னா உயிரையே விடுகுதப்பா
அதைப் போலே அனைவரும் உடல் சுகம் தேடாது
உள்ளதை கொண்டு வாழ பழகனும்பா அப்போது
ஞானமும் கிட்டும்மப்பா

No comments: