Saturday, October 9, 2010

பரம்பொருளே உனக்கோர் மடல்

கரும வினையை தீர்க்க
பிறவி பயனை அடைய
உடலைக் கொடுத்த இறைவா
மடலை வரைகிறேன் உனக்கே

உடலைக் கொடுத்தாய் ஊனம் இன்றி
பொருளைக் கொடுத்தாய் நலமாய் வாழ
வாழ்க்கையை கொடுத்தாய் வாழ்ந்து பார்க்க
அறிவைக் கொடுத்தாய் உன்னை அறிய

அழகான வீடு, அற்புதமான கணவர்
அருமையான பிள்ளைச் செல்வங்கள்
அளவோடு பொருள் வளம் பொன் வளம்
அனைத்துக்கும் மேலான போதும் என்ற நிறை மனம்

இத்தனையும் அளித்த என் இறைவா
அத்தனைக்கும் நன்றிதான் பாராட்டினேன்
என்னிடம் ஏதும் குறை கண்டாயோ
பின் ஏன் இந்த சோதனை

நீ எனக்கு வைக்கும் பரீட்சையோ
அல்லது என் உள்ளொளிப் பயணத்துக்கு தீட்சையோ
அறிகிலேன் அறிவிலி நான்
என்னை தடுத்தாட் கொள் இறைவா
பின் ஏன்

No comments: