Monday, October 18, 2010

உத்தம புருஷர் யார்?

தர்ம நியாயம் தெரிந்திருக்க
நன்றி மறவாமல் உதவி மிக
சிறிதே ஆனாலும் பெரிதாய்
நினைக்கும் பெருந்தன்மையோடு
நல்லொழுக்கம் கொண்டு
சத்தியம் தவறாது
கண்டவர் வியக்கும் பேரழகோடு
கோபம் கடுஞ்சொல் இல்லாமல்
எதிரிகளையும் தம் குணங்களால்
அஞ்ச வைக்கும் ஆற்றலோடு
நாம் இருந்தால் நாம்
உத்தம புருஷரே - ஆனால்
இத்தனை குணங்களும்
ஒரு சேர கொண்ட ஒரிதயமாகில்
இருந்தால் அது நமக்கு
கொண்டாட்டமே இத்தகு
குணங்களை கொண்ட ஒரு
இதயத்தை நாரதர் காட்ட
வால்மீகியும் வடித்தது
ராமாயணமே
ராமனும் ஆமே கதாநாயகன்.

No comments: