பரிசுத்தமானவள், இனிமையானவள் அவளால் எத்தனை நன்மை 
உயிர்களுக்கு உயிர்வாழ் இனங்களுக்கு 
நீரின்றி அமையாது உலகு என்பது அல்லவோ பெரியோர் மொழி 
உடல் தூய்மைக்கு நீர் தேவை உணவு சமைக்க நீர் தேவை 
பயிர்களுக்கு  நீர் தேவை எத்தனை தேவைகளை பூர்த்தி செய்கிறாள் 
நீரோடும் நதி அழகு புண்ணியத் தீர்த்தமது அதில் நீராடினால் 
பாவங்கள் போகும் புண்ணியமும் சேரும் அவளைப் போல் 
புனிதராகவும்  புனிதப்படுத்துபவராகவும் நாம் இருக்க வேண்டும் 
என்பதே அவள் கற்று தரும் பாடம் 
புனிதராகலாம் புனிதப்படுத்தலாம் 
அடுத்தது நெருப்பிடம் பாடம் கற்கலாம் 
 
No comments:
Post a Comment