Wednesday, October 20, 2010

விண்

விண் எனப்படுவதே ஆகாயம்
எங்கும் நிறைந்தது ஆகாயம்
நிர்மலமானது ஆகாயம்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கும் நிறைந்தாற்போல்
விண்ணும் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ளதே அது
நம்முள்ளும் இருகிறதே
ஆகாயத்தைப் போன்றே
பரமாத்மா சொரூபமும்
உள்ளும் புறமும் எப்போதும்
எங்கேயும் நிறைந்துள்ளதுபோல்
இனிய குணங்களோடு
நிர்மல மனதோடு எல்லாம் வல்ல
இறைவனை நம்முள்ளும் காண்போம்

No comments: