Saturday, October 30, 2010

மலரினும் மெலிதோ அவள் மனம்

மலரினும் மெல்லியல் அவளே
மெழுகென உருகிடும் மனமே
என்னரும் தோழியும் அவளே
சொல்லவா அவளின் குணத்தை

வாடிய செடிக்கு நீர் பாய்ச்சியே
செடியின் நகைப்பை பாரென சொல்வாள்
வாழையின் இலையை கிள்ள
வாழை அழுகிறதே என்பாள்

ஒரு நாள் இரவு மின்சாரம் தட்டு
பறவையின் வடிவில் மெழுகு
அதை ஏற்றியே வைத்தேன் அங்கு
சற்றே நேரம் போனது

மெழுகும் உருக ஆரம்பிக்க
மெழுகாய் உருகினாள் என் தோழி
கண்கள் இரண்டிலும் கண்ணீர் வழிய
காரணம் கேட்டேன் என்னவென்றே
பறவை சாகக் கிடக்கிறேதே என்றாள்

இதுபோல் எத்தனை எத்தனை
அனுபவம் அவளிடம்
என்னவென்றே சொல்வேன்
மலரினும் மெலிதோ அவள் மனம்





No comments: