Wednesday, October 13, 2010

எது சுகம்

தோளிலே முகம் புதைத்து விம்மும்போது
மனம் அறிந்து துயர் துடைக்க
நேசமிக்க கணவரின் தலை வருடல்
சுகமோ சுகம்

அழகான மாலைப் பொழுதில்
இணையாக ஜோடி சேர்ந்து
இயற்கையை ரசிக்கும்போது
செல்லமாக தட்டி செல்லும்
சில்லென்ற காற்று
சுகமோ சுகம்

கடற்கரையில் நிற்கையிலே
அலைப் பெண்களின் அட்டகாசம்
ரசித்துக் கொண்டிருக்கும்போதே
தஞ்சமென சரண் அடைந்தாற்போல்
பாதத்தை வருடுவதும்
சுகமோ சுகம்

காலையில் சென்று
மாலையில் திரும்ப
களைப்பே இருப்பினும்
காலைக் கட்டிக் கொண்டு
கொஞ்சிடும் மழலையின்
அணைப்பும் சுகமோ சுகம்

இத்தனை சுகம் இருந்தாலும்
அத்தனைக்கும் சிகரம்
உடல் தூய்மையோடு
உளத் தூய்மைக் கொண்டு
வாழப் பழக அவ்வாழ்க்கை
சுகமோ சுகம் சுகமோ சுகம்
என்னவென்று சொல்வேன்
இச்சுகத்தை.

No comments: