தோளிலே முகம் புதைத்து விம்மும்போது
மனம் அறிந்து துயர் துடைக்க
நேசமிக்க கணவரின் தலை வருடல்
சுகமோ சுகம் 
அழகான மாலைப் பொழுதில் 
இணையாக ஜோடி சேர்ந்து 
இயற்கையை ரசிக்கும்போது 
செல்லமாக தட்டி செல்லும் 
சில்லென்ற காற்று 
சுகமோ சுகம் 
கடற்கரையில் நிற்கையிலே 
அலைப் பெண்களின் அட்டகாசம் 
ரசித்துக் கொண்டிருக்கும்போதே 
தஞ்சமென சரண் அடைந்தாற்போல் 
பாதத்தை வருடுவதும்
சுகமோ சுகம் 
காலையில் சென்று 
மாலையில் திரும்ப 
களைப்பே இருப்பினும் 
காலைக் கட்டிக் கொண்டு
கொஞ்சிடும் மழலையின் 
அணைப்பும் சுகமோ சுகம் 
இத்தனை சுகம் இருந்தாலும் 
அத்தனைக்கும் சிகரம் 
உடல் தூய்மையோடு 
உளத் தூய்மைக் கொண்டு 
வாழப் பழக அவ்வாழ்க்கை
சுகமோ சுகம் சுகமோ சுகம் 
என்னவென்று சொல்வேன் 
இச்சுகத்தை. 
 
No comments:
Post a Comment