இயற்கை தான் எத்தனை அழகு - அவை  
கற்றுத் தரும் பாடம் தான் எவ்வளவு 
விண்ணும், காற்றும் நெருப்பும் 
நீரும் நிலமும் இயற்கையன்றோ 
அதில் நாம் கற்கும் பாடம் இவையன்றோ 
பூமி ஆஹா பூமியை நினைத்தால் எத்தனை  பெருமிதம் 
அவளோ பஞ்ச  பூதங்களில் கடைசி பூதம் 
என்னே அவளது பொறுமை என்னே அவளது பெருமை 
வெட்டி, கிளறி, தூர் வாரி, மிதித்து இத்தனை நாம் செய்யினும் 
அவளோ நமக்கு உயிராகிய பயிரை கனிகளை கைகளை 
அல்லவோ நமக்கு வாரி வாரி வழங்குகிறாள் 
அவளிடம் நாம் பொறுமையை கற்கலாம் 
இன்ன செய்தார்க்கும் இனியவையே செய்யலாம் 
நீரைப் பற்றி அடுத்து சொல்கிறேன் 
 
No comments:
Post a Comment