Monday, October 18, 2010

Thaalaattu

ஆராரோ ஆரீராரோ யாராரோ வந்தாரே
ஆத்தாத்தா வந்தா அவளோடே ஆடினே
அப்பாத்தா வந்தா அவளோடே ஆடினே
மாமன்கார வந்தான் அவனோடே ஆடினே
அத்தேக்காரி வந்தா அவளோடு ஆடினே
எல்லோரோடு ஆடி விட்டு இப்பத்தா கூவுரே
என் புருஷ சினுன்கிரா சீகிரந்தான் தூங்கேண்டா
இதனை பாடு பாடிட்டே இன்னு உனக்கு என்னடா
சீக்கிரமே தூங்கடா ராமன் கதே சொல்றேன்
தசரத ராமன் கௌசல்யா ராமன் விச்வமித்ரநோடே
உபயத்தாலே சீதையை மணந்தானடா
கைகேயி சூழ்ச்சியாலே கானகமே சென்றாண்டா
அனும சுக்ரீவ விபீஷன மற்றும் வானர சேனை
பலத்தோடு ராவணனை கொன்றாண்டா
மீண்டு அயோத்யா வந்து பட்டம் ஏற்றாண்டா
ஆராரோ ஆரீராரோ தூங்கடா கண்ணா
ராமன் கதையும் முடிந்தது
குழந்தையும் தூங்கியது
ஏன் கணவருமே - எரிச்சலுடன் தாய் சென்றால்
படுக்கைக்கே

No comments: