சூரியக் குலத் தோன்றாலாம் ராமனை நாரதர் புகழ் பாட 
அதைக் கேட்ட வால்மீகியும் பரவசத்தில் மூழ்கினார் 
சீடர் பரத்வாஜருடன் தமசி நதியில் நீராட செல்கையில் 
ஆணும் பெண்ணுமாய் அன்றில் பறவை இரண்டு 
ஒன்று கலந்து உறவாடி விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருக்க 
எங்கிருந்தோ வந்த வேடன் அதைக் குறி பாரதி அம்பெய்த 
அந்தகோ ஆண் பறவை இரத்தம் பெருக கீழே விழுந்து மாண்டது 
துணையை இழந்த பெண் பறவை துக்கம் தாளாமல் கலங்கியது 
இக்காட்சியைக் கண்ட முனிவரின் மனமும் இளகியது 
பறவை மேல் கொண்ட இரக்கம் கோபமாய் உருவெடுக்க 
அடே வேடா ஆண் பறவையைக் கொன்ற நீ ஓரிடத்தில் 
நில்லாமல் அலைந்து திரியக் கடவாய் என்றே சபித்தார் 
கோபத்தில் கொடுத்த சாபம், கோபம்  தெளிந்தப் பின் 
வருத்தத்தில் ஆழ்ந்து மீண்டும் மீண்டும் அதிலேயே சுற்றி வர 
சாபம் போல் தோன்றிய வார்த்தைகள் பாடலாக புலப்பட 
அதிலே நிலைத்து நினைந்து  உறைந்து  போக 
பிரமனும் தோன்றி மேலும் பல கவிதைகள் இது போல் 
புனைவாய் அதற்க்கான முன்னோட்டமே இது என 
கூறி ராம காதையை படைக்கும்படி அருளிச் செய்ய 
நமக்கு கிடைத்ததோ அருமையான ராம காவியம் 
வால்மீகி ராமாயணம்,  படித்தே மகிழ்வோம் நாளுமே 
 
No comments:
Post a Comment