Wednesday, October 20, 2010

neruppu

நெருப்பு பஞ்ச பூதங்களின் மூன்றாவது பூதம்
எத்தனை ஒளி மிக்கது தனக்கென உருவமற்றது
தன்னால் எரியும் பொருளாகவே மாறுவது
பரிசுத்தமானது. தனக்குள் விழும் அத்தனையும்
விழுங்கும் நெருப்பு எதனாலும் பாதிப்படையாதே
மாசும் அடையாது எத்தனையோ பயன் காண்கிறோம்
இறைவனுக்கு அர்ப்பிக்க நெருப்பினால் ஹோமம் வளர்த்து அர்ப்பிக்கிறோம் அத்தனை புனிதன் நெருப்பு
தனக்குள் விழும் பொருளாகவே தான் மாறும் நெருப்பைப் போல்
ஆத்மா அந்தந்த சரீரத்தில் அந்தந்த உருவாக தோற்றமடையுமே
நெருப்பினைப் போன்றே ஞானி தான் செல்லும் இடத்தை
புனிதபடுத்துவதே போல் நாம் செல்லும் இடமும் புனிதமாக
நெருப்பை போல் பரிசுத்தமாக இருக்க முயற்சிப்போமே
அடுத்து தொடரும் காற்றின் அருமை

No comments: