சீடர்கள் குழுமினர் வேத பாடம் கற்க 
ஞானியும் வந்தார் பாடத்தை தொடங்கினார் 
பூனை ஒன்று குறுக்கிலும் நெடுக்கிலும் ஓட 
சீடர்கள் கவனம் திசை திரும்பியது 
ஞானி  சொன்னார் ஒரு  சீடரிடம் 
பூனையை பிடித்து கட்டு என்றே 
தினமும் பூனை குறுக்கே வரவும் 
இதுவே தினமும் வாடிக்கைஆச்சு 
காலம் சென்றது ஞானியும் அடைந்தார் 
இறைவனின் திருவடி - ஞானியின் பாடம்
கேட்ட பூனையும் அவர் வழி சென்றது   
சீடரில் மூத்தவர் ஞானியின் பீடத்தில் 
வழக்கம் போல் கூடினர் சீடர் குழாமுமே 
பாடம் தொடங்கும் முன் பார்த்தால்  
பூனையைக் கட்டும் கம்பம் வெறுமை
பார்த்தார் ஞானி , உடனே   சீடரை அழைத்து 
பூனையை சீக்கிரம் கொண்டு வந்து கட்டுங்கள் 
பாடம் நடத்த நேரமாச்சு என்றார் 
காரணம் அறியாது, அறியவும் முயலாது
முன்னம் நடந்ததை பழக்கம் என கருதிய 
புதிய ஞானியைப் போன்றே
விளக்கம் காணாது பழக்கம் வழி நடக்கும் 
அனைவரும் மூட நம்பிக்கைக்கு அடிமைகளே!
 
No comments:
Post a Comment